முதலமைச்சர் அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளரையே ஆலோசகராக நியமித்துள்ளார். இதற்கு முன் ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக என யாராக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமித்து அவரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவோம். ஆனால், இன்று இவருக்கு தேர்தல் நேரத்தில் யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்களோ; ஆலோசனை வழங்கினார்களோ அவர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளார். இன்னும் சில நாட்களில் அவருடைய மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார். முதலமைச்சர் எல்லாவற்றையும் சினிமா ஆக்கிவிட்டார். அரசாங்கம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
