RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் அறிவியல் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் STEM ஆய்வக திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  திருவளர்ச்செல்வி  தலைமை தாங்கினார்.  வரவேற்புரை எஸ். கிருஷ்ணகுமாரி பள்ளி தலைமை ஆசிரியர் Hand in Hand India நிறுவனத்தின் சார்பாக லலிதா சீனிவாசன் , செல்ல சுப்பு ,ஜான் சுகுமார், மற்றும் செல்வி ஆசிரியர் திருமதி  தேவமனோகரி STEM Lab ஆசிரியர் அம்பிகா,பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்கள், ஆசிரியர்கள், JRC மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பேசுகையில், STEM (Science, Technology, Engineering & Mathematics) ஆய்வகம் மாணவிகளுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவித்து, அறிவியல் சோதனைகள், புதுமையான கண்டுபிடிப்புகள், கணித மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்த ஆய்வகத்தின் மூலம் மாணவிகள் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை எளிதாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக, அனைவருக்கும் ராஜலக்ஷ்மி நன்றி தெரிவித்து விழா இனிதே நிறைவுற்றது. இந்த STEM ஆய்வகம் மூலம் திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதிய  சாதனைகள் படைப்பார்கள் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33