RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் அரசு உதவிபெறும் பள்ளிகள் கட்டணம் வசூல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழக அரசு 2008ல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் சிறப்பு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பல பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து அனுமதியற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
அரசாணைக்கு முரணாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு மாறாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதி ராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோரிக்கைகளை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அரசாணை வெளியீட்டும், எவ்வாறு சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பி, இது தொடபாக தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Recent News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு பி.எட்…

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான…

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா  நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

திரிணமூல் காங்கிரசில் இருந்து…

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும்,…

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான…

லண்டன்:இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்… அமளியும்… திமுகவினர் வெளிநடப்பும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்……

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

எதை உடைக்க முடியாது என்று கூறினார்களோ அதை சுக்குநூறாக உடைத்துள்ளோம்: முதல்வர் விஜய்

எதை உடைக்க முடியாது…

சென்னை:தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன்,…

1 11 12 13 14 15 33