RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் அரசு உதவிபெறும் பள்ளிகள் கட்டணம் வசூல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழக அரசு 2008ல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் சிறப்பு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பல பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து அனுமதியற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
அரசாணைக்கு முரணாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு மாறாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதி ராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோரிக்கைகளை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அரசாணை வெளியீட்டும், எவ்வாறு சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பி, இது தொடபாக தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Recent News

அரசங்க வேலைவாய்ப்பு

அரசங்க வேலைவாய்ப்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மையத்தில்…

யாரும் பயப்பட வேண்டாம்

யாரும் பயப்பட வேண்டாம்

“நேற்று வந்தவர் என்று ஒருகாலமும் நாங்கள்…

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ் அர்ஜுனா

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ்…

“தமிழக அரசியல் 2026க்கு முன்பு, பின்பு…

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத…

அரக்கோணம்:தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக…

த.வெ.க. தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

த.வெ.க. தோழமை கட்சிகள்…

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில்…

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு…

1 4 5 6 7 8 33