RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் 2 அமர்வுகள் நடத்தப்பட்டன. முதல் அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து பங்கேற்றனர். 2-ம் அமர்வில், அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்து பேசுகையில், வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசாக இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின் சாரம், சாலை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதி களில் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறிகூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.
முக்கியமாக பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்ப டுத்த வேண்டும். அதில் மாற்றம் இல்லாமலும், சமரசம் இல் லாமலும் செயல்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு உரிய சிறப்பு ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும். அதன் படி, மாவட்ட கலெக்டர்களும் போலீஸ் சூப்பிரண்டுகளும் இதில் கூர்மையான மற்றும் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
2-வது நாள் மாநாடு
இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் 2-வது நாளாக மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். மாலை 6 மணி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தின் நிறைவில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார். அப்போது திறமையாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குவார்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33