RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், நாகர் கோவில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி நாகர்கோவில் மாநகராட்சியின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப் பட்டுள்ளது.
கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தகுந்த மாற்றுப்பாதைகளை சீர மைத்து, எச்சரிக்கை பல கைகள் வைக்கப்பட்டுள் ளது.
தற்போது பக்கசுவர் மற்றும் சாலைகள் அமைப் பதற்காக அருகில் உள்ள இடம் கையகப்படுத்தி, சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அருகில் உள்ள பொதுமக் களுக்கு எந்தவிதமாக இடையூறுகளின்றி மேலும் இப்பணிகளை தாமதிக்கமால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்த விதமான காரணமும் கூறாமல், தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன் பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே கோட்ட பொறியாளர், மாநகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டவருக்கு அறிவு றுத்தபட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய் வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர் கோவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரகுராம், ரயில்வே உதவி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Recent News

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்…

தூத்துக்குடி:தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத்…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல்…

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல்…

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆய்வுக்கு :…

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர்…

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு…

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க…

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்வேலைவாய்ப்பு!

ரூ. 25 லட்சம் கல்விக் கடன் திட்டம்

ரூ. 25 லட்சம்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலரூ. 25…

1 3 4 5 6 7 33