RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3ல் பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3ம் தேதி பதவியேற்பார் என்று கர்நாடகா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜி.சி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் க காங்கிரஸ் 135 இடங்களை க கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. முதல்வர் > பதவிக்கு சித்தராமையா, காங்கிரஸ் மாநில எ தலைவராக இருந்த டி.கே. எ சிவகுமார் இடையே கடும் ய போட்டி ஏற்பட்டது. நீண்ட இழு பறிக்கு பின்னர், க காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியையும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்கியது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க ‘அதிகார பகிர்வு’ ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி சித்தராமையாவை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லிக்கு அழைத்தார். மூத்த தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு அவரை தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து மே 28 அன்று சித்தராமையா பதவி விலகினார். இந்நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி மாலை 5.15 மணியளவில் டி.கே.சிவகுமார் கர்நாடகா முதல்வராக பதவியேற்பார் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தெரி வித்துள்ளார். இறை நம்பிக்கையும், ஜோதிட நாட்டமும் கொண்ட டி.கே. சிவகுமாருக் கு ஜோதிடர்களே ஜூன் 3ம் மாலை 5.15 மணி முதல்வராக பதவியேற்க நல்ல நேரம் என்று குறித்துக் கொடுத்ததாக தகவல். இன்று நடைபெறவுள்ள காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தில் டி. கே. சிவகுமார் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். கர்நாடக முதல்வராக சிவகுமார் முன்மொழியப்பட்டத்தில் சித்தராமையாவுக்கு வருத்தம் என்று சலசலக்கப்படும் நிலையில், மாநில அமைச்சர் முனியப்பா இன்று அளித்தப் பேட்டியில், “சித்தராமையா டி.கே.சிவகுமார் இடையே எந்த உரசலும் இல்லை. டிகேஎஸ் முதல்வராவதற்கு முழு சம்மதத்தையும் சித்தராமையா ஏற்கெனவே வழங்கிவிட்டார். சட்டமன்றக் குழு கூட்டம் நடத்த வேண்டியது மட்டுமே மிச்சம்” என்று கூறியது கவனிக்கத்தக்கது.

Recent News

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

1 3 4 5 6 7 12