RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு… சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

சென்னை:
சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மேகதாது அணை தீர்மானத்தில் எதிர்க்கட்சித்தலைவர் கூறிய திருத்தத்தை முதல்-வர் விஜய் சேர்த்தது அவையை மீறிய செயலாகும். விதிகளுக்கு எதிராக தீர்மானத்தில் திருத்தம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என சொல்வது ஏன்?
அரசின் தனித்தீர்மானத்தில் திருத்தம் செய்தது தொடர்பாக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப கடிதம் கொடுத்திருந்தோம். உரிமை மீறல் பிரச்சினையை அதிமுக சார்பில் அவைக்கு கொண்டு வர அனுமதி கேட்டோம். ஆனால் உரிமை மீறல் பிரச்சினை குறித்து பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சட்டசபையில் எங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33