RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

அரக்கோணம்:
தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக உருவெடுத்துள்ளது அரக்கோணம். அங்குள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் விஜய், அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான காந்தி ராஜுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையம், பஜார் தெரு மற்றும் பழனிப்பேட்டை ஆகிய இடங்களில் நான்கு மதுக்கடைகள் இயங்கி வந்தன. அந்த மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் ஏற்பட்டன. போக்குவரத்து நெரிசல், பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொங்கியெழுந்த மக்கள் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி அரக்கோணம் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சி அமைந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள 717மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இதன் காரணமாக, அரக்கோணத்தில் மூன்று மதுக்கடைகள் சில நாள்களுக்கு முன்பு மீதமுள்ள மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியாக அரக்கோணம் உருவெடுத்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் அரசை பாராட்டி வருகின்றனர்.

Recent News

தவெக-வினர் தற்குறி அல்ல;…

சென்னை,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா…

இடி மின்னலுடன் மழைக்கு…

தென் மேற்கு பருவ மழை தொடங்கிய…

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

1 19 20 21 22 23 33