RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் அறிவியல் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் STEM ஆய்வக திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  திருவளர்ச்செல்வி  தலைமை தாங்கினார்.  வரவேற்புரை எஸ். கிருஷ்ணகுமாரி பள்ளி தலைமை ஆசிரியர் Hand in Hand India நிறுவனத்தின் சார்பாக லலிதா சீனிவாசன் , செல்ல சுப்பு ,ஜான் சுகுமார், மற்றும் செல்வி ஆசிரியர் திருமதி  தேவமனோகரி STEM Lab ஆசிரியர் அம்பிகா,பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்கள், ஆசிரியர்கள், JRC மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பேசுகையில், STEM (Science, Technology, Engineering & Mathematics) ஆய்வகம் மாணவிகளுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவித்து, அறிவியல் சோதனைகள், புதுமையான கண்டுபிடிப்புகள், கணித மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்த ஆய்வகத்தின் மூலம் மாணவிகள் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை எளிதாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக, அனைவருக்கும் ராஜலக்ஷ்மி நன்றி தெரிவித்து விழா இனிதே நிறைவுற்றது. இந்த STEM ஆய்வகம் மூலம் திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதிய  சாதனைகள் படைப்பார்கள் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

Recent News

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!பலரும் பேசினார்கள். பேசியவர்களில்…

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

தங்கத்தின் விலை இன்று…

சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஜூலை…

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

குதிரை பேர வழக்கு:…

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை…

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன்…

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒழுகினசேரி மேம்பால பணி;…

நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று…

1 2 3 4 5 6 33