RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நெல்லை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா ரத வீதியுலா- திருநடன தீபாராதனை

நெல்லை:
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் நேற்று ஆனி திருவிழா தேரோட்டமும் இன்று திருநடன தீபாராதனையும் நடந்தது.
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா சிறப்பாக நடைபெறும். கேரிவலில் இந்த ஆண்டு ஆனி திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி ரதவீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் அழகியகூத்தர், சிவகாமி அம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்தனர்.
10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) நடராஜருக்கு திருநடன தீபாராதனையும் ரத வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர்செய்திருந்தனர்.

Recent News

தவெக-வினர் தற்குறி அல்ல;…

சென்னை,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா…

இடி மின்னலுடன் மழைக்கு…

தென் மேற்கு பருவ மழை தொடங்கிய…

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

1 19 20 21 22 23 33