RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

சூரத்:
கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல் போன ஜிக்​னேஷ், தான் கட்டி வைக்​கப்​பட்​டிருப்​பது போன்ற ஒரு வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்​பி​யுள்​ளார். அந்த வீடியோ​வில் தன்னை மர்ம நபர்​கள் கடத்​தி​விட்​ட​தாக​வும், தன்னை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்​டும் என்று அவர்​கள் கூறு​வ​தாக​வும் தெரிவித்​துள்​ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் தன்னை கொன்​று​விடு​வார்​கள் என்​றும் கூறியுள்ளார்.
ஜிக்​னேஷ் குடும்​பத்​தினர் இதுகுறித்து சூரத் போலீ​சில் புகார் செய்​தனர். தனினப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடுபட்டனர். கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் மற்​றும் செல்​போன் சிக்​னல்​களை ஆய்வு செய்தனர். ஜூன் 15-ம் தேதி கோத்ரா​வில் உள்ள ஒரு ஓட்​டலில் இருந்து ஜிக்​னேஷ் கைது செய்யப்​பட்​டார்.
விசா​ரணை​யில், அவர் தன்​னைத் தானே கயிற்​றால் கட்​டிக் கொண்டு வீடியோ எடுத்து குடும்​பத்தினரை ஏமாற்​றியதை ஒப்புக்கொண்​டார். பங்​குச் சந்​தை​யில் ஏற்​பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இது​போன்று செய்​த​தாக அவர் தெரி​வித்​தார்.
இதையடுத்​து, ஜிக்​னேஷ் மீது பொய் வழக்​குப் பதிவு செய்​தல், ஆதா​ரங்​களை உரு​வாக்​குதல் மற்​றும் அரசு இயந்​திரத்தை தவறாகப் பயன்​படுத்​துதல் ஆகிய பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ பதிவு செய்​துள்​ளனர்​.

Recent News

தவெக-வினர் தற்குறி அல்ல;…

சென்னை,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா…

இடி மின்னலுடன் மழைக்கு…

தென் மேற்கு பருவ மழை தொடங்கிய…

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

1 19 20 21 22 23 33