RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

சூரத்:
கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல் போன ஜிக்​னேஷ், தான் கட்டி வைக்​கப்​பட்​டிருப்​பது போன்ற ஒரு வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்​பி​யுள்​ளார். அந்த வீடியோ​வில் தன்னை மர்ம நபர்​கள் கடத்​தி​விட்​ட​தாக​வும், தன்னை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்​டும் என்று அவர்​கள் கூறு​வ​தாக​வும் தெரிவித்​துள்​ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் தன்னை கொன்​று​விடு​வார்​கள் என்​றும் கூறியுள்ளார்.
ஜிக்​னேஷ் குடும்​பத்​தினர் இதுகுறித்து சூரத் போலீ​சில் புகார் செய்​தனர். தனினப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடுபட்டனர். கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் மற்​றும் செல்​போன் சிக்​னல்​களை ஆய்வு செய்தனர். ஜூன் 15-ம் தேதி கோத்ரா​வில் உள்ள ஒரு ஓட்​டலில் இருந்து ஜிக்​னேஷ் கைது செய்யப்​பட்​டார்.
விசா​ரணை​யில், அவர் தன்​னைத் தானே கயிற்​றால் கட்​டிக் கொண்டு வீடியோ எடுத்து குடும்​பத்தினரை ஏமாற்​றியதை ஒப்புக்கொண்​டார். பங்​குச் சந்​தை​யில் ஏற்​பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இது​போன்று செய்​த​தாக அவர் தெரி​வித்​தார்.
இதையடுத்​து, ஜிக்​னேஷ் மீது பொய் வழக்​குப் பதிவு செய்​தல், ஆதா​ரங்​களை உரு​வாக்​குதல் மற்​றும் அரசு இயந்​திரத்தை தவறாகப் பயன்​படுத்​துதல் ஆகிய பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ பதிவு செய்​துள்​ளனர்​.

Recent News

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

1 25 26 27 28 29 33