RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை அளவு எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

பூச்சிக்கடிவலி

எறும்பு உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கலாம்.

உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவர்கள் உடல் இறுகி மெலிய கொள்ளுப் பயறு (Horse Gram) உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வயிற்றுப்புண்

பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குறையும்.

வயிற்றுப்போக்கு

கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து மைபோல் அரைத்து உட்கொண்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

வேனல் கட்டி

வேனல் கட்டியால் வலி அதிகமாக இருந்தால், சிறிதளவு சுண்ணாம்புடன் தேன் அல்லது வெல்லம் கலந்து கட்டியின் மீது தடவி, அதன் மேல் ஒரு வெற்றிலையை ஒட்டி வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.

வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்க்குரு குறையலாம்.

உடல் தளர்ச்சி

முட்டைக்கோசுடன் பசுவின் வெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி குறையும்.

நீர்ச்சுருக்கு / நீர்க்கடுப்பு

வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்காததால் நீர்ச்சுருக்கு ஏற்படலாம்.

தீர்வு:

  • தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ஒரு கைப்பிடி பார்லி அரிசியை 8 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின் குடிக்கலாம்.
  • இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தை சேர்த்து கஞ்சியாக காய்ச்சி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்க உதவும்.

எரிச்சல் கொப்பளம்

நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்து பூசினால் எரிச்சல் குறைந்து கொப்பளம் ஏற்படாமல் இருக்கலாம்.

பித்த நோய்கள்

கேரட் சாறுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால்:

  • கர்ப்பிணிப் பெண்களின் வாந்தி குறைய உதவும்.
  • உடலுக்கு வலு தரும்.
  • பித்தக் கோளாறுகள் குறைய உதவும்.

கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் கபக்கட்டு குறையலாம்.

நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்ததால் ஏற்பட்ட புண்ணுக்கு, வில்வ மரக் கட்டையுடன் சந்தனம் சேர்த்து அரைத்து தடவி வந்தால் புண் ஆற உதவும்.

குறிப்பு: இவை பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட வீட்டு வைத்திய முறைகள். கடுமையான அல்லது நீடித்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Recent News

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

1 3 4 5 6 7 12