RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், இத்திட்டங்கள் குறித்து அனைத்து மக்களுக்கும் போதுமான விழிப்புணர்வு இல்லை. மக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இத்தகவல்கள் வழங்கப்படுகின்றன.

1. பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிக்ஷா யோஜனா

துவக்கம்: 2016

நோக்கம்:
வேளாண் கல்வியை மேம்படுத்துதல்.

திட்ட விளக்கம்:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மூலம் “வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபட வைத்தல் மற்றும் நிலைபெற வைத்தல்” (ARYA) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கிரிஷி விக்யான் கேந்திரா (KVK) எனப்படும் வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


2. தேசிய வேளாண் சந்தை (e-NAM)

துவக்கம்: 14 ஏப்ரல் 2016

நோக்கம்:

  • பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்னணு வேளாண் சந்தைகளை (e-Mandis) ஒருங்கிணைத்தல்.
  • விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற வழிவகை செய்தல்.

நிதியளிப்பு:
வேளாண் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிதி (ATIF) மூலம் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) வழியாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

அமல்படுத்தும் நிறுவனம்:
SFAC (Small Farmers’ Agribusiness Consortium) தேசிய வேளாண் சந்தையின் முன்னணி மேம்பாட்டு அமைப்பாக செயல்படுகிறது. இது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.


3. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY)

துவக்கம்: 2016

நோக்கம்:
இயற்கை பேரிடர்கள் மற்றும் தடுக்க இயலாத காரணங்களால் பாதிக்கப்படும் உணவுப் பயிர்கள், தானியங்கள் மற்றும் தோட்டப் பயிர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்குதல்.

திட்ட விளக்கம்:

  • காரிப் (Kharif) பயிர்களுக்கு – 2% காப்பீட்டு கட்டணம்
  • ரபி (Rabi) பயிர்களுக்கு – 1.5% காப்பீட்டு கட்டணம்
  • தோட்டப் பயிர்களுக்கு – 5% காப்பீட்டு கட்டணம்

மீதமுள்ள காப்பீட்டு தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. அரசின் மானியத்திற்கு உச்சவரம்பு எதுவும் இல்லை.


4. மண் வள அட்டைத் திட்டம் (Soil Health Card Scheme)

துவக்கம்: 19 பிப்ரவரி 2015

நோக்கம்:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்து, மண்ணின் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வழங்கும் மண் வள அட்டையை அளித்தல்.

நிதியளிப்பு:
மண் ஆரோக்கியப் பரிசோதனைக்கான செலவு மத்திய மற்றும் மாநில அரசுகளால் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

திட்டத்தின் முழக்கம்:
“சுவஸ்த் தாரா, கேத் ஹரா”
(ஆரோக்கியமான பூமி – பசுமையான பண்ணை)

தொடரும்…

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33