RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

காமராஜரின் 124 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள வஉசி மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழகத்தில் லாக்கப் மரணம் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை நடக்கிறது. முதியோர்,  பெண்கள் நகைக்காக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் கஞ்சா பிற போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தினமும் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். நான்கு லாக்கப் மரணம் நடந்து இருக்கிறது. 

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இருக்கும்போது ஒரு லாக்கப் மரணத்திற்கே தற்போதைய முதல்வர் விஜய் வாய் கிழிய பேசினார். ஆனால் தற்போது மௌனம் காக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. 

மேகதாது அணை கட்டுவது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு?

அப்போது நல்ல மழை பொழிந்தது.. தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. விவசாயம் அமோக விளைச்சல் இருந்தது என்பது தான் உண்மை. ஆனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.ஆனால் ஆளுங்கட்சியினர் திமுக தான் தூண்டி விடுவதாக கூறுகிறார்கள். பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை, ஆனால் தளபதி ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். தண்ணீரும் வழங்கவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு தடை சொல்வதற்கோ மேலும், அங்கு ஆளுகின்ற காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கவோ, விவசாயிகள் பிரச்சனைக்கோ நடவடிக்கை எடுக்கவில்லை. கண்டும் காணாதவராக கேட்டும் கேட்காதவராக முதல்வர் விஜய் இருக்கிறார் என்றார்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33