RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் செல​வில் 18 அரசு பள்​ளி​களுக்கு 900 இருக்​கைகள் வழங்​கப்​பட்​டன.

ஹூண்​டாய் மொபிஸ் சிஎஸ்​ஆர் எனப்​படும் பெருநிறுவன சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக 18 அரசுப் பள்​ளி​களுக்கு ரூ.70 லட்​சம் செல​வில் 900 இருக்​கைகளை (Bench Desk) வழங்க முன்​வந்​தது.

அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகள் வழங்​கும் நிகழ்ச்சி எழும்​பூர் பிரசிடென்சி மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்​து​கொண்டு 18 அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகளை வழங்​கினர். பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​கள் அவற்றை பெற்​றுக்​கொண்​டனர்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனாபேசுகை​யில், “அடுத்த 10 ஆண்​டுக்​குள் அரசுப் பள்​ளி​களை நாட்​டின் தலைசிறந்த பள்​ளி​களாக உரு​வாக்கு​வோம். பள்​ளி​களில் பிற பாடங்​களைப் போன்று உடற்​கல்விக்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்க வேண்​டும்.உடற்​கல்விக்கு வாரம் இரு பாட​வேளை​கள் மட்​டும் இருப்​பது போதாது. பிற பாடங்​களைப் போன்று உடற்​கல்விக்​கும் தின​மும் வகுப்​பு​கள் நடை​பெற வேண்​டும்” என்​றார் அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, “மாணவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து விஷ​யங்​களை​யும் தவெக அரசு செய்​யும்.அதற்கு பதிலாக, மாணவர்​கள் தங்​கள் தன்​னம்​பிக்​கை, தமிழ் ஆர்​வம், தலை​மைத்​து​வப் பண்பு ஆகிய​வற்றை வளர்த்​துக் கொள்ள வேண்​டும்” என்றார்.இந்​நிகழ்ச்​சி​யில், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன், பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ், ஹூண்​டாய் மொபிஸ் நிறு​வனப் பொது​மேலா​ளர் ஹூமின் ஹோ, ஆசிரியர்​கள்​, மாணவர்​கள்​ கலந்​து​கொண்​டனர்​.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33