RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர் களால் பரப்பப்பட்ட வதந் திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தலைவர்களின் இணைப்பு” என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கட்சி ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின. எம். ஜி. ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந் திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு. பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். எனது தொகுதி மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை கடமையாக எண்ணு கிறேன். தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர்ந்திட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அயராது பாடுபடுவோம்’ எனத் தெரி வித்துள்ளார்.

Recent News

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

1 2 3 12