நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்கனவே நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பிறகு வருகிற ஜூன் 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த முறை வினாத்தாள் கசியாமல் இருப்பதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களில் வினாத்தாள் கிடைக்கும் வகையில் ஹெலிகாப்டரில் வினாத்தாள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
