
சென்னை:
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக இந்த படம் ‘தலைவர் 173’ என அழைக்கப்படுகிறது. முதலில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘தலைவர் 173 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் இணையும் முதல் நாளே, மாஸான ஓப்பனிங் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.