RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சரிடம்  சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் கால அவகாசத்தை, கடந்த 10.06.2026 அன்று தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும்  சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. செ. ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பட் மற்றும் டி.டி பிரவீன் ஆகியோர்  முதலமைச்சரை நேரில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்தனர்.

கடந்த 10.06.2026 அன்று அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஓராண்டு காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார்   முதலமைச்சர் அவர்களிடம் இக்கோரிக்கையை முன்னெடுத்து வலியுறுத்தினார்.

கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர மற்றும் கரையோர கிராமங்களில் இச்சுரங்கத் திட்டம் அமைந்தால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் கடலோரச் சூழல் ஆகியவை கடுமையாகப் பாதிக்கும் என்பதை மாண்புமிகு முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளையும், விளக்கத்தையும்  கேட்டறிந்த முதலமைச்சர் மக்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது; உங்களது கோரிக்கையின் மீது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்

Recent News

1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்-தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

1.36 லட்சம் எம்பிபிஎஸ்…

நடப்பாண்டில் 1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார்-ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்…

எந்த அதிகாரிக்கும் முதல்வர் மீது நம்பிக்கையில்லை – ஆர்.பி.உதயகுமார்

எந்த அதிகாரிக்கும் முதல்வர்…

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக அருண் ஐபிஎஸை…

லஞ்ச் புகார் தெரிவிக்க Whatsapp எண் அறிமுகம்

லஞ்ச் புகார் தெரிவிக்க…

தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால்…

அடுத்து மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அடுத்து மேக் அப்…

முதலமைச்சர் அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளரையே…

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம் கட்சி தலைவர் சீமான்

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம்…

தமிழினம் தன்னை மறந்து,தன் அன்னை மொழியை,…

1 2 3 4 33