RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் அரசு உதவிபெறும் பள்ளிகள் கட்டணம் வசூல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழக அரசு 2008ல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் சிறப்பு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பல பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து அனுமதியற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
அரசாணைக்கு முரணாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு மாறாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதி ராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோரிக்கைகளை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அரசாணை வெளியீட்டும், எவ்வாறு சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பி, இது தொடபாக தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Recent News

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் -அமைச்சர் ராஜ்மோகன்

15 சிபிஎஸ்இ பள்ளிகள்…

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வி,…

கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக-முதல்வர் மரியாதை

கர்மவீரர் காமராஜரின் புகழ்…

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண்…

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

ஹூண்​டாய் மொபிஸ் சமூக…

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின்…

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

சென்னை:உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்…

தனுஷ் – வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படம்!

தனுஷ் – வெற்றிமாறன்…

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்…

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்…

1 2 3 4 5 33