புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ் டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப் போது இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவு கணைகள், ‘நாகாஸ்த்ரா!’ மற்றும் ‘ஸ்கைஸ்ட்ரைக் கர்’ போன்ற காமிகேஸ் ட்ரோன்களையும் (தற் கொலைப்படை ட்ரோன் கள்) வாங்குவதில் சைப் ரஸ் விருப்பம் தெரிவித் தது. மேலும் தேடுதல் மற் றும் மீட்பு பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய் யப்பட்டது. இந்த ராணுவ ஒப்பந் தம் இறுதி செய்யப்பட் டால், துருக்கி அதிபர் ரசிப் தையீப் எர்டோக னுக்கு மிகப் பெரிய பின் னடைவாக இருக்கும். BRAHMOS BRAHMOS AHMOS BRAHMOS SAHMOS சைப்ரஸ் நாட்டின் வட பகுதியை நீண்டகால மாக ஆக்கிரமித்து இருக் கும் துருக்கியின் பாது காப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமை யும். இதனால் இந்தியா விடம் பிரம்மோஸ் மற்றும் ட்ரோன்கள் வாங்க சைப் ரஸ் முடிவு செய்துள்ளது துருக்கியில் பீதியை ஏற் படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீது இந் தியா ஆபரேஷன் சிந் தூர் நடவடிக்கை மேற் கொண்டபோது, பாகிஸ் தானுக்கு துருக்கி நூற் றுக்கணக்கான ட்ரோன் களை ரகசியமாக அனுப் பியது. அவற்றை இந் திய எல்லைகள் நோக்கி அனுப்பியது பாகிஸ்தான். ஆனால், இந்திய வான் பாதுகாப்பு கருவிகள் அவற்றை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின. இந்தி யாவின் பிரம்மோஸ் ஏவு கணை பாகிஸ்தானின் விமான தளங்களைத் தகர்த்ததை துருக்கி உட்பட உலக நாடுகள் நன்கு அறியும். இதனால் இந்திய ஆயுதங்களை வாங்க சைப்ரஸ் முடிவு செய்திருப்பது துருக்கிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.