RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

வாஷிங்டன்:
ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய 6 வார போர் நட வடிக்கையில், அமெரிக்கா 42 விமானங்களை இழந்ததாக அந்நாட்டு பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டு ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போரின் போது அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்ப டுகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளி யிட்ட தகவல்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அமெரிக்கா இழந்த அல்லது சேத மடைந்த விமானங்களில் 4 எப்15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு எப்35ஏ லைட்னிங்2 போர் விமானம், ஒரு ஏ10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் ஆகியவை அடங்கும். மேலும், 7 கே.சி 135 ஸ்ட்ராடோடேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள். ஒரு இ3 சென்ட்ரி கண்காணிப்பு விமானம், 2 எம்.சி130ஜெ கமாண்டோ சிறப்பு நடவடிக்கை விமானங்கள், ஒரு எச்.எச்60டபிள்யூ ஜாலி கிரீன் ஹெலிகாப்டர் ஆகியவையும் சேத மடைந்ததாக தெரி விக்கப் பட்டுள்ளது. இதுதவிர, 24 எம்.க்யூ9 ரீப்பர் டிரோன்கள் மற்றும் ஒரு எம்.க்யூ 4சி டிரைட்டன் டிரோனும் இழக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33