RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

வாஷிங்டன்:
ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய 6 வார போர் நட வடிக்கையில், அமெரிக்கா 42 விமானங்களை இழந்ததாக அந்நாட்டு பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டு ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போரின் போது அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்ப டுகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளி யிட்ட தகவல்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அமெரிக்கா இழந்த அல்லது சேத மடைந்த விமானங்களில் 4 எப்15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு எப்35ஏ லைட்னிங்2 போர் விமானம், ஒரு ஏ10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் ஆகியவை அடங்கும். மேலும், 7 கே.சி 135 ஸ்ட்ராடோடேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள். ஒரு இ3 சென்ட்ரி கண்காணிப்பு விமானம், 2 எம்.சி130ஜெ கமாண்டோ சிறப்பு நடவடிக்கை விமானங்கள், ஒரு எச்.எச்60டபிள்யூ ஜாலி கிரீன் ஹெலிகாப்டர் ஆகியவையும் சேத மடைந்ததாக தெரி விக்கப் பட்டுள்ளது. இதுதவிர, 24 எம்.க்யூ9 ரீப்பர் டிரோன்கள் மற்றும் ஒரு எம்.க்யூ 4சி டிரைட்டன் டிரோனும் இழக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!பலரும் பேசினார்கள். பேசியவர்களில்…

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

தங்கத்தின் விலை இன்று…

சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஜூலை…

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

குதிரை பேர வழக்கு:…

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை…

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன்…

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒழுகினசேரி மேம்பால பணி;…

நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று…

1 2 3 4 5 6 33