எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி திருத்தணி: 2026 சட்டமன்ற தேர் தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்எல் ஏக்கள் தனியாக பிரிந்து சென்றனர். த.வெ.க. ஆட்சி அமைய ஆதரவு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகவும் அதிருப்தியில் இருந்தார். பிரிந்து சென்ற வர்களின் கட்சி பதவியை பறித்தார். அவர்களை பதவி நீக்கம் செய் யக்கோரி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்தநிலையில் பிரிந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன் னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதையடுத்து திரு வள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் குப்புசாமி, திருப்பதி ஏழுமலையான் திருக் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து அதன் பிரசாதத்தை முன்னாள் தமிழக முதல் மைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, மாலை அணி வித்தும், சால்வை அணி வித்தும் வழங்கி வாழ்த்து பெற்றார்.