RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், நாகர் கோவில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி நாகர்கோவில் மாநகராட்சியின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப் பட்டுள்ளது.
கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தகுந்த மாற்றுப்பாதைகளை சீர மைத்து, எச்சரிக்கை பல கைகள் வைக்கப்பட்டுள் ளது.
தற்போது பக்கசுவர் மற்றும் சாலைகள் அமைப் பதற்காக அருகில் உள்ள இடம் கையகப்படுத்தி, சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அருகில் உள்ள பொதுமக் களுக்கு எந்தவிதமாக இடையூறுகளின்றி மேலும் இப்பணிகளை தாமதிக்கமால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்த விதமான காரணமும் கூறாமல், தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன் பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே கோட்ட பொறியாளர், மாநகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டவருக்கு அறிவு றுத்தபட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய் வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர் கோவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரகுராம், ரயில்வே உதவி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33