RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், நாகர் கோவில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி நாகர்கோவில் மாநகராட்சியின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப் பட்டுள்ளது.
கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தகுந்த மாற்றுப்பாதைகளை சீர மைத்து, எச்சரிக்கை பல கைகள் வைக்கப்பட்டுள் ளது.
தற்போது பக்கசுவர் மற்றும் சாலைகள் அமைப் பதற்காக அருகில் உள்ள இடம் கையகப்படுத்தி, சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அருகில் உள்ள பொதுமக் களுக்கு எந்தவிதமாக இடையூறுகளின்றி மேலும் இப்பணிகளை தாமதிக்கமால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்த விதமான காரணமும் கூறாமல், தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன் பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே கோட்ட பொறியாளர், மாநகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டவருக்கு அறிவு றுத்தபட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய் வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர் கோவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரகுராம், ரயில்வே உதவி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Recent News

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

1 25 26 27 28 29 33