RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல்: மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் தகவல்

சென்னை:
125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி ராம் ஜி புதிய சட்​டத்தை திரும்ப பெறக் கோரி, தமிழகத்​தில் 200-க்​கும் மேற்பட்ட மையங்​களில் ஜூலை 1ல் கருப்​புக் கொடி ஏந்தி மறியல் போராட்​டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அனைத்​து​ வகை மாற்​றுத்​ திறனாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்கத்தினர் முடிவு செய்​துள்​ளனர்.
இது குறித்​து, சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், மாநில பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ ராணி ஆகியோர் கூட்​டாக வெளியிட்ட அறிக்​கையில், மாற்​றுத்​திற​னாளி​கள் உட்பட கிராமப்​புற விவசாய கூலித் தொழிலா​ளர்​கள் பயன்​பெற்று வந்த “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​துக்​குப்” பதிலாக ஜூலை 1 முதல் விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்​டத்தை மத்​திய அரசு அமல்​படுத்தி மாற்​றுத்​ திற​னாளி​களின் வாழ்​வா​தா​ரத்தை சிதைக்க திட்​ட​மிட்​டுள்​ளதை கண்​டித்​தும், இந்த புதிய சட்​டத்தை உடனே திரும்​பப் பெற கோரி​யும், தற்​போது நடை​முறை​யில் உள்ள மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​தையே தொடர்ந்து அமல்​படுத்த வலி​யுறுத்​தி​யும், புதிய சட்டம் அமலுக்கு வரும் ஜூலை 1ம் தேதியை கருப்பு தின​மாக அனுசரித்​து, கருப்​புக் கொடி ஏந்​தி​ தமிழகம் முழு​வதும் 200-க்​கும் மேற்​பட்ட மையங்​களில் மறியல் போராட்​டம் நடத்த முடிவு செய்யப்​பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Recent News

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 31 32 33