RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

அரக்கோணம்:
தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக உருவெடுத்துள்ளது அரக்கோணம். அங்குள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் விஜய், அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான காந்தி ராஜுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையம், பஜார் தெரு மற்றும் பழனிப்பேட்டை ஆகிய இடங்களில் நான்கு மதுக்கடைகள் இயங்கி வந்தன. அந்த மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் ஏற்பட்டன. போக்குவரத்து நெரிசல், பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொங்கியெழுந்த மக்கள் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி அரக்கோணம் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சி அமைந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள 717மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இதன் காரணமாக, அரக்கோணத்தில் மூன்று மதுக்கடைகள் சில நாள்களுக்கு முன்பு மீதமுள்ள மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியாக அரக்கோணம் உருவெடுத்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் அரசை பாராட்டி வருகின்றனர்.

Recent News

கோரிக்கை மனுக்களை பெற்ற கன்னியாகுமரி கலெக்டர்

கோரிக்கை மனுக்களை பெற்ற…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட் டம் கந்திலி கிழக்கு…

தமிழக ஆளுனருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தமிழக ஆளுனருடன் நீலகிரி…

தமிழ்நாடு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு…

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

யார் தயவால் ஆட்சி…

சென்னை:17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்…

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது சட்டசபை: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது…

சென்னை:சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி…

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

1 10 11 12 13 14 33