RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க் கப்பட்ட 23 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறை கள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச் சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழக அமைச்ச ரவையில் சிறுபான்மையி னர் நலத்துறை மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனிடையே தஞ்சை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் இன்று விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஐ.யு.எம்.எல். கட்சியின் பரிந்துரையை ஏற்று முதல் அமைச்சர் விஜய் கவர்னருக்கு அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து நேற்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறி வித்திருந்தார். மேலும் பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்றும், உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோ சித்து அறிவிப்பு வெளி யிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு இன்று காலை முதல் அமைச்சர் விஜய் தலைமை யிலான அமைச்சரவையில் பதவியேற்பது உறுதியாகி உள்ளது. திருமாவளவன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. தமிழக அமைச் சரவையில் இடம்பெற உள்ள ஐ.யு.எம்.எல். கட்சிக்கு சிறுபான்மை யினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை 10 மணிக்கு பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33