
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெரிய கல்வராயன் மலை, கீழ்நாடு ஊராட்சியின் தலக்கரை மற்றும் பாச்சேடு கிராம மக்களின் 50 வருட கோரிக்கையாக இருந்த பேருந்து வசதி குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் N.வெங்கடேசன், இளைஞர் அணி இணை மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சிவா ஆகியோர் பொது மக்களின் நலன் கருதி தலக்கரை மற்றும் பாச்சேடு கிராமங்களுக்கு முதல் முறையாக பேருந்து வசதி ஏற்படுத்தி அந்த சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முதன் முதலாக பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் மேற்கு ஒன்றிய காமக்காபாளையம் கிராம தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இத்தகவலை காமக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நவீன் குமார் தெரிவித்தார்.
