RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தவெகவிற்கு தாவ துடிக்கும் மாற்றுக் கட்சியினர்!

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜோசப் விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. இளைஞர்களும், இளம் பெண்களும் என தனது வாக்குகளை தவெகவிற்கு வாரி வழங்கினர். ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நடிகர் விஜய் படிப்படியாக தனது திறமைகளை வெளியே காட்ட ஆரம்பித்தார். விஜய் வருகையால் அதிமுக, திமுகவின் செல்வாக்கு குறைந்தது. அதிமுக இரண்டாக பிரிந்தது.


அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் அதாவது, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் எம்.எஸ்.எம். ஆனந்தன் என அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 37 மூத்த நிர்வாகிகள் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர்.

விஜயதாரணி


இப்போது காங்ரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி திடீரென பாஜகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்துள்ளார். அவர் மட்டுமின்றி அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன், முன்னாள் எம்எல்ஏ ரவி, திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் தவெக கட்சியில் இணைந்தனர். முக்கிய நிர்வாகிகள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இப்போது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படியும், அப்படியுமாக ஏதாவது ஒரு காரணத்திற்காக தமிழக அரசியல் கட்சிகளில் இருந்து அதன் உறுப்பினர்கள் அந்த கட்சியை விட்டு வெளியேறி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய தயாராக உள்ளனர். இன்னும் எத்தனை பேரோ?
இதற்கு காரணம் கட்சியின் மீது உள்ள வெறுப்பு, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தலை குறி வைத்துத்தான் என்றே கூறப்படுகிறது.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33