RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

நாகர்கோவில்:
திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக் குப் பின்னர் கடந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்த தால் , அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான நேற்று 22-ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெற்றது.
108 வைணவத்திருப்பதி களில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்ற திருத் தலமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக த்துக்குப்பின்னர் கோவி லில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது.
நேற்று கோவில் நடை திறப்பைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடந்தது. தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், ஆகியன நடந்தது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்ட பத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை கோகுல் தந்திரி நடத்தினார். பின்னர் ஆதி கேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் சன்னதியில் நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடந்தது.மதியம் ஸ்ரீபலி எழுந்தருளல், ஸ்ரீபூதபலி, அன்னதானம் மாலையில் அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது.
இதில் ஏராளமான பக் தர்கள் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Recent News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு பி.எட்…

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான…

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா  நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

திரிணமூல் காங்கிரசில் இருந்து…

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும்,…

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான…

லண்டன்:இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்… அமளியும்… திமுகவினர் வெளிநடப்பும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்……

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

எதை உடைக்க முடியாது என்று கூறினார்களோ அதை சுக்குநூறாக உடைத்துள்ளோம்: முதல்வர் விஜய்

எதை உடைக்க முடியாது…

சென்னை:தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன்,…

1 11 12 13 14 15 33