RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

நாகர்கோவில்:
திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக் குப் பின்னர் கடந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்த தால் , அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான நேற்று 22-ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெற்றது.
108 வைணவத்திருப்பதி களில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்ற திருத் தலமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக த்துக்குப்பின்னர் கோவி லில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது.
நேற்று கோவில் நடை திறப்பைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடந்தது. தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், ஆகியன நடந்தது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்ட பத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை கோகுல் தந்திரி நடத்தினார். பின்னர் ஆதி கேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் சன்னதியில் நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடந்தது.மதியம் ஸ்ரீபலி எழுந்தருளல், ஸ்ரீபூதபலி, அன்னதானம் மாலையில் அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது.
இதில் ஏராளமான பக் தர்கள் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Recent News

தவெக-வினர் தற்குறி அல்ல;…

சென்னை,சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா…

இடி மின்னலுடன் மழைக்கு…

தென் மேற்கு பருவ மழை தொடங்கிய…

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

1 19 20 21 22 23 33