RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம் சார்பில் பாப்பா கோவில் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய்யின்ன 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமார் தமிழக வெற்றி கழக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழ்வேளூர் தென் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன், ஒன்றிய இணை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் கார்த்தி, ஒன்றிய பொருளாளர் பிரசாத், ஒன்றிய துணைப் பொருளாளர் மார்க்ஸ், இளைஞர் அணி பொருளாளர் எஸ்.ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பாப்பா கோயில், ஒரத்தூர், அகர ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி, மகாதானம், ஆலங்குடி, மற்றும் வடுகச்சேரி உள்ளிட்ட ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை, வார்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தவெக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Recent News

அரசங்க வேலைவாய்ப்பு

அரசங்க வேலைவாய்ப்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மையத்தில்…

யாரும் பயப்பட வேண்டாம்

யாரும் பயப்பட வேண்டாம்

“நேற்று வந்தவர் என்று ஒருகாலமும் நாங்கள்…

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ் அர்ஜுனா

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ்…

“தமிழக அரசியல் 2026க்கு முன்பு, பின்பு…

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத…

அரக்கோணம்:தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக…

த.வெ.க. தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

த.வெ.க. தோழமை கட்சிகள்…

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில்…

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு…

1 4 5 6 7 8 33