RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில். மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக் கியுள்ளது. நீட் தேர்வு காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துள்ளார்.
மாணவர்களின் உயிர் மற்றும் எதிர்காலத்துடன் விளையாடும் நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால் தேர்வு மையங்களுக்கே ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினை கள் தொடர்ந்து நடைபெறு கின்றன.
மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கண்டி த்து மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்குப் பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும். நீட் தேர்வு தொடர்பான மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகளால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மத் திய அமைச்சர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை. சட்டசபையில் எங்களால் தான் நீங்கள் ஆட்சி அமைத்தீர்கள் என்று உதயநிதி கூறியதற்கு முதலமைச்சர் விஜய் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜயை வாழும் காமராசர் என்று கூறிய தற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கண் டனம் தெரிவிக்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் திருச்சி சிவா, முக்தார் உள்ளிட்டோர் காமராஜரை இழிவாக பேசியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காமராஜர் பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் திமுகவினர் மாலை அணிவிக்க வரக்கூடாது. வந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். நல்லது செய்ய வெட்கப்படுவது திமுகதான் என்று கூறினார்.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33