RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில். மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக் கியுள்ளது. நீட் தேர்வு காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துள்ளார்.
மாணவர்களின் உயிர் மற்றும் எதிர்காலத்துடன் விளையாடும் நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால் தேர்வு மையங்களுக்கே ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினை கள் தொடர்ந்து நடைபெறு கின்றன.
மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கண்டி த்து மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்குப் பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும். நீட் தேர்வு தொடர்பான மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகளால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மத் திய அமைச்சர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை. சட்டசபையில் எங்களால் தான் நீங்கள் ஆட்சி அமைத்தீர்கள் என்று உதயநிதி கூறியதற்கு முதலமைச்சர் விஜய் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜயை வாழும் காமராசர் என்று கூறிய தற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கண் டனம் தெரிவிக்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் திருச்சி சிவா, முக்தார் உள்ளிட்டோர் காமராஜரை இழிவாக பேசியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காமராஜர் பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் திமுகவினர் மாலை அணிவிக்க வரக்கூடாது. வந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். நல்லது செய்ய வெட்கப்படுவது திமுகதான் என்று கூறினார்.

Recent News

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!பலரும் பேசினார்கள். பேசியவர்களில்…

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

தங்கத்தின் விலை இன்று…

சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஜூலை…

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

குதிரை பேர வழக்கு:…

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை…

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன்…

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒழுகினசேரி மேம்பால பணி;…

நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று…

1 2 3 4 5 6 33