RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். அவரது கணவர் விமானப்​படை அதி​காரி​யாக பணி​யாற்றி வரு​கிறார். ஹஸ்​ரத் மவுலானா என்​பவர் முன்​னிலை​யில் அப்பெண்ணின் விருப்​பத்​துக்கு மாறாக வலுக்​கட்​டாய​மாக மதமாற்​றச் சடங்​கு​களைச் செய்​துள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவம் வீடியோ​வும் வெளி​யாகி​யுள்​ளது.
இந்த சம்​பவம் பற்றி அறிந்த அவரது கணவர், புகார் அளித்​ததை அடுத்து இந்த சம்​பவம் தற்​போது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. போலீ​ஸார் பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் நிலம் வாங்க விருப்​பம் தெரி​வித்து சம்​பந்​தப்​பட்ட பெண்​ணின் பள்ளி நண்​பர் அய்​யாஸ் தாஜ் மதா​ரே, என்​பவர் தொடர்பு கொண்டு நேரில் சந்​திக்க அழைத்​துள்​ளார்.
பிப்​ர​வரி 8-ம் தேதி ஒரு ஓட்​டலில் நடந்த சந்​திப்​பின்போது, அய்​யாஸ் அந்​தப் பெண்​ணுக்​குக் கொடுத்த குளிர்​பானத்​தில் போதை மருந்து கலந்​துள்​ளார். போதை மருந்​தால் பெண் மயங்​கியதும் அவரை பாலியல் வன்​கொடுமை செய்து அதை வீடியோ​வாக பதிவு செய்​துள்​ளார். அந்த காட்​சிகளை சமூக வலை ​தளங்​களில் வெளி​யிட்டு விடு​வ​தாக மிரட்டி சுமார் ரூ.4 லட்​சம் வரை ஏமாற்றியுள்ளார். இதற்கு அவரது நண்பர் அய்​யாஸ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்​தப் பெண்​ணுக்கு பில்​லி, சூனி​யம் செய்து​விடு​வோம் என்​றும் அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர். கடந்த மே மாதம் 31ம் தேதி அய்​யாஸ், அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இரு​வரும் சேர்ந்து அந்​தப் பெண்ணைக் கல்​மேஷ்வர் என்ற பகு​திக்கு கடத்​திச் சென்றுள்ளனர்.
அங்கு ஹஸ்​ரத் மவுலானா என்ற மதப் பெரிய​வர் முன்​னிலை​யில், அந்​தப் பெண்​ணின் விருப்​பத்​துக்கு மாறாக வலுக்​கட்​டாய​மாக மத மாற்​றச் சடங்​கு​களைச் செய்​துள்​ளனர். இதையடுத்து அவரை, மிரட்டி அய்​யாஸுடன் அவருக்கு திரு​மணம் செய்து வைக்கப்பட்டுள்​ளது. இவ்​வாறு அந்த முதல் தகவல் அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.
இதையடுத்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி, அய்​யாஸ் தாஜ் மதா​ரே, அவரது கூட்​டாளி அமீன் ஷேக் ஆகிய இரு​வரை​யும் கைது செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சட்​ட​விரோத​மாக இந்த திரு​மணத்தை நடத்தி வைத்த மவுலா​னாவை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33