RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை அளவு எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

பூச்சிக்கடிவலி

எறும்பு உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கலாம்.

உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவர்கள் உடல் இறுகி மெலிய கொள்ளுப் பயறு (Horse Gram) உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வயிற்றுப்புண்

பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குறையும்.

வயிற்றுப்போக்கு

கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து மைபோல் அரைத்து உட்கொண்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

வேனல் கட்டி

வேனல் கட்டியால் வலி அதிகமாக இருந்தால், சிறிதளவு சுண்ணாம்புடன் தேன் அல்லது வெல்லம் கலந்து கட்டியின் மீது தடவி, அதன் மேல் ஒரு வெற்றிலையை ஒட்டி வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.

வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்க்குரு குறையலாம்.

உடல் தளர்ச்சி

முட்டைக்கோசுடன் பசுவின் வெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி குறையும்.

நீர்ச்சுருக்கு / நீர்க்கடுப்பு

வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்காததால் நீர்ச்சுருக்கு ஏற்படலாம்.

தீர்வு:

  • தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ஒரு கைப்பிடி பார்லி அரிசியை 8 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின் குடிக்கலாம்.
  • இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தை சேர்த்து கஞ்சியாக காய்ச்சி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்க உதவும்.

எரிச்சல் கொப்பளம்

நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்து பூசினால் எரிச்சல் குறைந்து கொப்பளம் ஏற்படாமல் இருக்கலாம்.

பித்த நோய்கள்

கேரட் சாறுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால்:

  • கர்ப்பிணிப் பெண்களின் வாந்தி குறைய உதவும்.
  • உடலுக்கு வலு தரும்.
  • பித்தக் கோளாறுகள் குறைய உதவும்.

கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் கபக்கட்டு குறையலாம்.

நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்ததால் ஏற்பட்ட புண்ணுக்கு, வில்வ மரக் கட்டையுடன் சந்தனம் சேர்த்து அரைத்து தடவி வந்தால் புண் ஆற உதவும்.

குறிப்பு: இவை பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட வீட்டு வைத்திய முறைகள். கடுமையான அல்லது நீடித்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Recent News

எல் நினோ தாக்கமும்… தமிழகத்தில் உருவெடுக்கும் பாதிப்பும்…

எல் நினோ தாக்கமும்……

சென்னைஎல் -நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட…

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை – திருவாரூர்…

நாகை:நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த…

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை – திருவாரூர்…

நாகை:நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த…

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு – கலெக்டர் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி…

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள…

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் பிறந்தநாள் நல உதவிகள் – சமத்துவ விருந்து

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர்…

செங்கல்பட்டு:தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை…

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை அருகே பாப்பாகோவில்…

நாகை:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம்…

1 8 9 10 11 12 33