RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறை:
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவப் படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மயிலாடுதுறை கிட்ட ப்பா அங்காடி முன்பாக நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பானுசேகர் தலைமை தாங்கினார். அங்கு அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திரு வுருவப் படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவியும், மாலை அணிவித்தும் நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து தங்களின் மரியாதையைச் செலுத்தினர்.

இதேபோல், மயிலாடுதுறை ராஜன் தோட்டம் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வுகளில் வட்டாரத் தலைவர் அன் பழகன், கடலங்குடி சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அமீர் தீன், காங்கிரஸ் முக்கிய நிர்வாகி கனகசபை மற்றும் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33