RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

சென்னை:
17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தற்போது கஜானாவிற்கு சென்று சேர்த்துக்கொண்டிருக்கி றோம். மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டால் விட மாட்டோம். மக்கள் தயவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளால் தான் ஆட்சி நடக்கிறது.
“இப்போது புதிதாக ஒரு ஆயுதத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? ‘அவர்களுடைய தயவால்தான் நமது ஆட்சி நடக்கிறது’ என்பதுதான் அது. இந்த ஆட்சி மக்கள் தயவாலும், மனசாட்சியுள்ள சக்திகளின் ஆதரவாலும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. ‘நாங்கள் தான் அனுப்பி வைத்தோம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்’ என்று சிலர் கூறுகிறார்களே, அப்படி அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தபோது ஏன் கதறுகிறீர்கள்? ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு கதறல்?
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்று கூறுகிறார்கள். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்ததும் அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்றுதான் சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, இதில் எங்கிருந்து ‘நாங்கள் தான் அனுப்பி வைத்தோம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்’ என்று சொல்வது, புரியவில்லையே. ஆனால், மக்களுக்கு எல்லாமே நன்றாகப் புரியும். அவர்கள் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

1 27 28 29 30 31 33