RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

சென்னை:
17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று நடைபெற்றது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தற்போது கஜானாவிற்கு சென்று சேர்த்துக்கொண்டிருக்கி றோம். மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டால் விட மாட்டோம். மக்கள் தயவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளால் தான் ஆட்சி நடக்கிறது.
“இப்போது புதிதாக ஒரு ஆயுதத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? ‘அவர்களுடைய தயவால்தான் நமது ஆட்சி நடக்கிறது’ என்பதுதான் அது. இந்த ஆட்சி மக்கள் தயவாலும், மனசாட்சியுள்ள சக்திகளின் ஆதரவாலும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. ‘நாங்கள் தான் அனுப்பி வைத்தோம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்’ என்று சிலர் கூறுகிறார்களே, அப்படி அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தபோது ஏன் கதறுகிறீர்கள்? ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு கதறல்?
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்று கூறுகிறார்கள். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்ததும் அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்றுதான் சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, இதில் எங்கிருந்து ‘நாங்கள் தான் அனுப்பி வைத்தோம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்’ என்று சொல்வது, புரியவில்லையே. ஆனால், மக்களுக்கு எல்லாமே நன்றாகப் புரியும். அவர்கள் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

Recent News

இடதுசாரி கட்சியின் தலைவர்கள் முதல்வருடன் சந்தப்பு

இடதுசாரி கட்சியின் தலைவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்…

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்  சந்திப்பு

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு…

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்…

இது தர்மசங்கடமான தோல்வி அல்ல. ஆனால் எங்களுக்கு மிகவும் மனச்சோர்வை அளிக்கும் தோல்வி-ஸ்ரேயஸ் அய்யர் விளக்கம்

இது தர்மசங்கடமான தோல்வி…

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை…

NEET போன்ற சதிகளை தகர்த்தி வெற்றி பெற முயற்சிகளை இந்நாளில்  உறுதியேற்போம்-மு.க ஸ்டாலின்

NEET போன்ற சதிகளை…

மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில்…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை…

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில்…

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

1 5 6 7 8 9 33