RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

காமராஜரின் 124 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள வஉசி மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழகத்தில் லாக்கப் மரணம் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை நடக்கிறது. முதியோர்,  பெண்கள் நகைக்காக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் கஞ்சா பிற போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தினமும் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். நான்கு லாக்கப் மரணம் நடந்து இருக்கிறது. 

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இருக்கும்போது ஒரு லாக்கப் மரணத்திற்கே தற்போதைய முதல்வர் விஜய் வாய் கிழிய பேசினார். ஆனால் தற்போது மௌனம் காக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. 

மேகதாது அணை கட்டுவது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு?

அப்போது நல்ல மழை பொழிந்தது.. தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. விவசாயம் அமோக விளைச்சல் இருந்தது என்பது தான் உண்மை. ஆனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.ஆனால் ஆளுங்கட்சியினர் திமுக தான் தூண்டி விடுவதாக கூறுகிறார்கள். பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை, ஆனால் தளபதி ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். தண்ணீரும் வழங்கவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு தடை சொல்வதற்கோ மேலும், அங்கு ஆளுகின்ற காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கவோ, விவசாயிகள் பிரச்சனைக்கோ நடவடிக்கை எடுக்கவில்லை. கண்டும் காணாதவராக கேட்டும் கேட்காதவராக முதல்வர் விஜய் இருக்கிறார் என்றார்.

Recent News

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3ல் பதவியேற்பு

கர்நாடக முதல்வராக டி.கே.…

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன்…

தாயுமானவர் திட்டத்தின் கீழ்…

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொ.இரத்தினசாமி,…

ஓயாமல் பாயும் மேகதாது விவகாரம்

ஓயாமல் பாயும் மேகதாது…

தலையங்கம் மக்கள்கோட்டை 28.05.2026 (2) ஓயாமல்…

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் கூட்டுறவு துறை…

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற…

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள் மத்திய அரசு…

1 21 22 23 24 25 33