RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

காமராஜரின் 124 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள வஉசி மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழகத்தில் லாக்கப் மரணம் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை நடக்கிறது. முதியோர்,  பெண்கள் நகைக்காக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் கஞ்சா பிற போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தினமும் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். நான்கு லாக்கப் மரணம் நடந்து இருக்கிறது. 

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இருக்கும்போது ஒரு லாக்கப் மரணத்திற்கே தற்போதைய முதல்வர் விஜய் வாய் கிழிய பேசினார். ஆனால் தற்போது மௌனம் காக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. 

மேகதாது அணை கட்டுவது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு?

அப்போது நல்ல மழை பொழிந்தது.. தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. விவசாயம் அமோக விளைச்சல் இருந்தது என்பது தான் உண்மை. ஆனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.ஆனால் ஆளுங்கட்சியினர் திமுக தான் தூண்டி விடுவதாக கூறுகிறார்கள். பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை, ஆனால் தளபதி ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். தண்ணீரும் வழங்கவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு தடை சொல்வதற்கோ மேலும், அங்கு ஆளுகின்ற காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கவோ, விவசாயிகள் பிரச்சனைக்கோ நடவடிக்கை எடுக்கவில்லை. கண்டும் காணாதவராக கேட்டும் கேட்காதவராக முதல்வர் விஜய் இருக்கிறார் என்றார்.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33