RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

சென்னை:
வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனை வாட்ஸ்அப் குளோபல் சிஇஓ குணால் ஷா பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை மாற்று பயனர்களுக்கு பகிராமல் மிகவும் பிரைவசியாக சாட் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகி விட்ட வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்ணை பகிராமல் அதற்கு மாற்றாக பயனர் பெயரை (ஹிsமீக்ஷீஸீணீனீமீ) பயன்படுத்தும் வகையிலான அப்டேட் அறிமுகமாக உள்ளது. இது வாட்ஸ்அப் செயலியில் மிக முக்கிய பிரைவசி அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பயனர்கள் தங்களது தனித்துவ பயனர் பெயரில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இது இப்போதைக்கு சர்வதேச அளவில் பகுதி பகுதியாக அறிமுகமாகி வருகிறது. இந்த அம்சம் குறித்து பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயல் நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிற பயனர்களுக்கு தங்களது தொலைபேசி எண்ணை பகிரமாக பயனர்கள் சாட் செய்ய முடியும்.

Recent News

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

1 25 26 27 28 29 33