RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

சென்னை:
வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனை வாட்ஸ்அப் குளோபல் சிஇஓ குணால் ஷா பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை மாற்று பயனர்களுக்கு பகிராமல் மிகவும் பிரைவசியாக சாட் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகி விட்ட வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்ணை பகிராமல் அதற்கு மாற்றாக பயனர் பெயரை (ஹிsமீக்ஷீஸீணீனீமீ) பயன்படுத்தும் வகையிலான அப்டேட் அறிமுகமாக உள்ளது. இது வாட்ஸ்அப் செயலியில் மிக முக்கிய பிரைவசி அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பயனர்கள் தங்களது தனித்துவ பயனர் பெயரில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இது இப்போதைக்கு சர்வதேச அளவில் பகுதி பகுதியாக அறிமுகமாகி வருகிறது. இந்த அம்சம் குறித்து பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயல் நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிற பயனர்களுக்கு தங்களது தொலைபேசி எண்ணை பகிரமாக பயனர்கள் சாட் செய்ய முடியும்.

Recent News

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!பலரும் பேசினார்கள். பேசியவர்களில்…

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

தங்கத்தின் விலை இன்று…

சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஜூலை…

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

குதிரை பேர வழக்கு:…

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை…

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன்…

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒழுகினசேரி மேம்பால பணி;…

நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று…

1 2 3 4 5 6 33