RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526 ஆம் கல்வியாண்டிற்கான பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 17868 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இதில் 17429 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று 97.54% விழுக் காட்டுடன் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 96.42% சதவீதமும். மாணவிகள் 98.64% சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
0.03% விழுக்காடு வித்தியாசத்தில் முதல் இடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அரசுப்பள்ளிகள் பீரி வில் தேர்வு எழுதிய 7869 மாணவர்களில் 7666 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 97.42% விழுக்காட்டுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 282 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 155 பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தது. பொதுத் தேர்வு முடிவுகளில் எப் போதுமே சிவகங்கை மாவட்டமானது முதல் 6 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்கும். சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் ஒட்டுமொத்த பள்ளிகள் பிரிவில் இரண்டாம் இடமும். அரசுப்பள்ளிகள் பிரிவில் முதலிடம் பெறவும் பல்வேறு வழி காட்டுதல்களையும் அறி வுரைகளையும் வழங்கிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அனை த்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் அதற்கு உறுதுணையாய் இருந்த அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆரசிரியர்கள், பாட ஆசிரியர்கள், அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், விடுதி களில் தங்கி பயின்ற மாணவர்களுக்கு உறு துணையாய் இருந்த விடுதிக்காப்பாளர்கள், மாணவச் செல்வங்கள், மாணவர்களின் பெற் றோர் சுள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்து அவர்களும் தேர்ச்சி பெறுவதற்கான வாழ்த்துக்களையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

Recent News

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

1 3 4 5 6 7 12