
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மீண்டும் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் சிபிஐ மாவட்ட தலைவர் நந்தி மற்றும் சிபிஎம் தாலுக்கா செயலாளர் காமராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி சுட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பெரும் திரளாக கலந்துகொண்டனர்.