
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து நிலை யத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமான ஜூன் 26-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே முன்னிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற் றும் பொதுமக்களுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
உடன் உதவி ஆணையர் (கலால்) வேடியப்பன், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி, துணைக்காவல் கண் கா ணிப்பாளர் முரளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் உள்ளனர்.